இலங்கை
வீடு உடைத்து கொள்ளை! – கோண்டாவிலில் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் – கோண்டாவிலில் வீடு ஒன்றை உடைத்து நகை, பணம் மற்றும் அலைபேசியைத் திருடிய ஒருவர் நேற்று கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவைச் சேர்ந்த 27 வயதுடைய குறித்த நபரை உரும்பிராய் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து 2, 1/2 தங்கப் பவுண் சங்கிலி, 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான அலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
ஓகஸ்ட் 25 ஆம் திகதி கோண்டாவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றை உடைத்து திருட்டு இடம்பெற்றமை தொடர்பில் வீட்டில் வசிப்பவரினால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login