இலங்கை
மின்னல் தாக்கி மீனவர் பலி
மட்டக்களப்பு – கொக்குவில் – முகத்துவாரம் ஆற்றுவாய் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது மின்னல் தாக்கியதில், ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முகத்துவாரம் ஆற்றுப் பகுதியில் நேற்று முன்தினம் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது மின்னல் தாக்கியதில் மூவர் காயமடைந்த நிலையில், ஒருவர் காணமால் போயிருந்தார்.
காணமால் போன மீனவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் சடலமாம மீட்கப்பட்டுள்ளார்.
திராய்மடு பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான உம்முனி விஜயகுமார் (வயது – 54) என்பவரே உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
You must be logged in to post a comment Login