அரசியல்
அரசியல் கைதிகளுக்கு விடுதலை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதிகள் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதில் நான்கு கைதிகள், கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர் என்றும் மேலும் மூன்று பேர் நாளை சிறையிலிருந்து வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எட்டாவது கைதி விடுவிக்கப்படுவதற்கு முன் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தங்களின் தண்டனைகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தமையினால் மூன்று கைதிகளின் விடுதலை காலதாமதமானது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகள் திரும்பப் பெறப்பட்டவுடன், அவர்கள் நாளை விடுவிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சட்டமாஅதிபர் மற்றும் நீதி அமைச்சின் பரிந்துரைகளை ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கான ஆவணங்களில் கடந்த புதன்கிழமை கையொப்பமிட்டார்.
You must be logged in to post a comment Login