இலங்கை
அரச மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தும் விடுதி!
அரசுக்கு சொந்தமான மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தும் வார்ட்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சு பரிசீலித்து வருகிறது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் செலவினக் குறைப்புகளுக்கு மத்தியில் சுகாதார சேவையை நிலைநிறுத்தும் நோக்கத்துடன், Economy Next உடன் பேசிய சுகாதார அமைச்சர், 30 சதவீத பணம் செலுத்தும் வார்ட்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சு பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.
“இது செலவை மீட்டெடுப்பதற்கு மட்டுமல்ல, தனியார் துறையை விட எங்களால் சிறந்த சேவையை வழங்க முடியும். ஒரு அறையுடன் செலவில் பாதிக்கு மக்கள் சிறந்த சேவையைப் பார்த்தால், அவர்கள் கட்டண வார்ட்களுக்குச் செல்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
அரச வைத்தியசாலைகளில் தனியான ஷிப்ட் அடிப்படையிலான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர், இலவச மற்றும் கட்டண வார்ட்களுக்கு இது நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
இலவச சுகாதார சேவைகளுக்காக காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வைத்திருக்க முயற்சிக்கிறேன். பின்னர் மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை,” என்று அவர் வெளிப்படுத்தினார்.
பணம் செலுத்தும் வார்ட் முறையானது சத்திரசிகிச்சைகளுக்காக காத்திருக்கும் வரிசையை 2 வருடங்களுக்குப் பதிலாக ஆறு மாதங்களாக குறைக்கும் என சுட்டிக்காட்டிய அமைச்சர், உத்தேச பணம் செலுத்தும் வார்ட் முறைமை இன்னும் அமைச்சரவைக்கு முன்மொழியப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
கொழும்பு தேசிய மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் வார்ட் யோசனை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
இலங்கையின் இலவச சுகாதார சேவையானது பொருளாதார நெருக்கடி காரணமாக செலவுக் குறைப்பு மற்றும் குறைக்கப்பட்ட சேவைகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. இதனால் பல அரச மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login