இலங்கை
வருட இறுதிக்குள் 2.9 பில்லியன் கடனுதவி!


இவ்வருட இறுதிக்குள் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதியளிக்கும் என இலங்கை எதிர்பார்த்துள்ளது.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நேற்று (செப்.23) ‘ஒன்லைன்’ ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, இலங்கை மத்திய வங்கி அதிகாரிகள் முதலீட்டாளர்களிடம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, த நவம்பர் நடுப்பகுதிக்குள், பொது மற்றும் தனியார் துறை கடனாளிகளிடமிருந்து நிதி உத்தரவாதங்களைப் பெறுவதை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது.
ஆண்டின் கடைசி காலாண்டிற்கும் 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கும் இடையில், இலங்கை தனது அனைத்து கடன் வழங்குநர்களுடனும் கொள்கை அடிப்படையில் ஒரு உடன்பாட்டை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது .
இந்த மாத தொடக்கத்தில், இலங்கை IMF உடன் 2.9 பில்லியன் டாலர் கடனுக்காக பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தை எட்டியது.