அரசியல்
முடிந்தால் கட்சியில் இருந்து நீக்கட்டும்! – டலஸ் சவால்
” உண்மையான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் நாங்கள்தான், முடிந்தால் கட்சியில் இருந்து எங்களை நீக்கி காட்டட்டும்.”
இவ்வாறு ராஜபக்ச தரப்புக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளது டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கூறியவை வருமாறு,
” நாட்டில் பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை. ஆனால் இராஜாங்க அமைச்சு நியமனம் இடம்பெறுகின்றது. என்ன நடக்கின்றதென தெரியவில்லை. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள், அநாதவராக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காகவே நாம் புதிய அரசியல் சக்தியை உருவாக்கியுள்ளோம். எமது முடிவில் எந்த தவறும் இல்லை.
கட்சியை விட்டு நீக்கினால் நிச்சயம் நீதிமன்றத்தை நாடுவோம். முடிந்தால் நீக்கி காட்டுமாறு சவாலும் விடுக்கின்றோம். ஏனெனில் உண்மையான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் நாங்கள்தான். கட்சிகளின் தனித்தும் மற்றும் கொள்கைக்காக நாமே முன்னிலையாகியுள்ளோம்.” – என்றார்.
You must be logged in to post a comment Login