அரசியல்
பெப்ரவரிக்குள் நாடாளுமன்றம் கலையும்!
அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்துக்கு பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தை கலைக்கக்கூடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இன்று தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க சிறந்த தலைவராக இருக்கின்றபோதிலும், அவரை சுயாதீனமாக இயங்குவதற்கு மொட்டு கட்சி இடமளிக்காது எனவும், காலை வாருவதற்கான நகர்வுகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் வெல்கம குறிப்பிட்டார்.
அதேவேளை, வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தாலும் இந்த ராஜபக்சக்களின் ஆட்சியில் அமைச்சு பதவி எதையும் பொறுப்பேற்பதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
You must be logged in to post a comment Login