இலங்கை
நீர் மட்ட உயர்வு! – நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு
மத்திய மலைநாட்டின் மேற்குப் பகுதிகளில் இடையிடையே பெய்து வரும் கடும் மழை காரணமாக லக்ஷபான மற்றும் கனியன் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று அதிகாலை முதல் திறக்கப்பட்டுள்ளது.
லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகளும், கனியன் நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவும் தலா மூன்று அகழிகளுடன் திறக்கப்பட்டுள்ளது.
தற்போது பெய்து வரும் மழையினால் காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையில் உள்ளதோடு, அந்தமட்டம் அதிகரித்துள்ளதையடுத்து, கனியன், லக்ஷபான, நியூ லக்ஷபான, பொல்பிட்டிய மற்றும் விமலசுரேந்திர ஆகிய நீர்மின் நிலையங்களில் அதிகபட்ட மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் ஒரு மணிநேர மின்வெட்டு காலம் அறிவிக்கப்பட்டாலும் மின்வெட்டு இன்றி 24 மணி நேர மின்விநியோகம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login