அரசியல்
22 ஆவது சட்டமூலம் – சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்!
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் அரசமைப்புக்கு உட்பட்டமாக அமைந்திருந்தாலும் சில சரத்துகளை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் கூடியதுபோ, 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமனறத்தின் சட்ட வியாக்கியானத்தை சபாநாயகர் சபைக்கு அறிவித்தார். இதன்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாத வகையில் நிறைவேற்றிக்கொள்வதே அரசின் எதிர்பார்ப்பு. அதற்கேற்ற வகையில் குழுநிலை விவாதத்தின்போது திருத்தங்கள் செய்யப்படும் என தெரியவருகின்றது.
You must be logged in to post a comment Login