இலங்கை
காலி துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி
காலி, பிடிகல – தல்கஸ்வல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 31 வயது நபரொருவர் பலியாகியுள்ளார்.
இவர் நேற்று நகருக்குச் சென்று மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, பதுங்கியிருந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவவத்தில் பலத்த காயமடைந்த நபர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
விசாரணையில் உயிரிழந்தவர் கடன் கொடுத்தவர் என்பது தெரியவந்துள்ளது.
பணத் தகராறு காரணமாக இந்நபர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படாத அதேவேளை, விசாரணைகளுக்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login