அரசியல்
ராஜபக்சக்களே நாட்டை சீரழித்தனர்!
“ராஜபக்சக்கள்தான் இந் நாட்டை சீரழித்தனர். அதே ராஜபக்சக்கள்தான் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குகின்றனர். இதனை அனுமதிக்க முடியாது. அதனால்தான் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்துகின்றோம்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று 3 ஆவது நாளாகவும் நடைபெற்ற இடைக்கால வரவு -செலவுத் திட்டம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், நாட்டில் முறைமை மாற்றத்துக்காக போராடியவர்கள்மீது கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறைகளுக்கும் அவர் கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.
You must be logged in to post a comment Login