அரசியல்
22 ஆவது திருத்தம்! – இறுதி அறிக்கை நாடாளுமன்றத்துக்கு
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் இந்த வார இறுதியில் நாடாளுமன்றத்துக்கு கிடைக்குமென நீதி அயமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தில் மூலம் முன்னெடுக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் நாடு எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமென்பதை வலியுறுத்திய அமைச்சர், அவ்வாறில்லாவிட்டால் அரசியல் கட்டமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்படும் தவறான நிலைப்பாடு மேலும் வலுப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login