இலங்கை
காட்டு யானை தாக்குதல்! – மாணவி உயிரிழப்பு
காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி, 17 வயதான பாடசாலை மாணவியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
விகாரைக்கு தானமெடுத்து, பெற்றோருடன் சென்று கொண்டு இருந்தபோதே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த 17 வயது மாணவி சாதாரண பரிட்சைக்கு தோற்றிய பின்னர் முடிவுகள் வரும் வரை காத்திருந்துள்ளார்.
குறித்த மாணவியின் அண்ணன் 14 நாட்களுக்கு முன்னரே, சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, விகாரைக்கு வழிபாட்டுக்கு செல்லும்போதுதான் அந்த பேரவலம் இடம்பெற்றுள்ளது.
You must be logged in to post a comment Login