இலங்கை
பாணின் விலை 300 ஐ தாண்டும்!!
ஒரு இறாத்தல் பாணின் விலை 300 ரூபாயாக அதிகரிக்கும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக கோதுமை மா இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கு கோதுமை மா நிறுவனங்கள் எடுத்துள்ள நடவடிக்கையால் 2,000 க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் பேக்கரிகளை மூட வேண்டி ஏற்படும் என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 350 ரூபாக்கு மேல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கோதுமை மா தட்டுப்பாடு தீர்க்கப்பட்டு, விலை குறைக்கப்படாவிடின், பாண் உட்பட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மொத்த விற்பனை நிலையங்களில் 50 கிலோகிராம் கோதுமை மா 17,000 ரூபாக்கும் ஏனைய இடங்களில் 20,000 ரூபாக்கும் விற்பனை செய்யப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login