அரசியல்
இடைக்கால வரவு – செலவுத் திட்டம் நாளை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் இடைக்கால வரவு – செலவுத் திட்டம் நாளை முன்வைக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றம் நாளை பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
இதன்போதே நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இடைக்கால பாதீட்டை முன்வைத்து உரையாற்றவுள்ளார். நிதி அமைச்சரின் உரையின் பின்னர் சபை ஒத்திவைக்கப்படும்.
பின்னர் நாளை மறுதினம் முதல் செப்டம்பர் இரண்டாம் திகதிவரை பாதீடுமீதான விவாம் இடம்பெறும். அன்று மாலை வாக்கெடுப்பும் நடத்தப்படும்.
You must be logged in to post a comment Login