அரசியல்
போராட்ட வன்முறைகள்! – ஆணைக்குழுவின் பதவி காலம் நீடிப்பு
நாட்டில் கடந்த மார்ச் 31 ஆம் திகதி முதல் மே 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பல பிரதேசங்களில் இடம்பெற்ற தீ வைப்பு சம்பவங்கள், தாக்குதல்கள் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்து ஆகஸ்ட் 31ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கை சமர்பிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச ஜுலை 14 ஆம் திகதி பதவி விலகினார். அதன்பின்னர் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார்.
இந்நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரை ஆணைக்குழுவின் காலத்தை நீட்டித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
You must be logged in to post a comment Login