இலங்கை
திருக்கேதீச்சரம் ஆவணப் பெட்டகம் நூல் வெளியீடு
இலங்கைத் தமிழர் கழகத்தினால் திருக்கேதீச்சரம் ஆவணப் பெட்டகம் எனும் நூல் யாழில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
இலங்கையில் பாடல் பெற்ற தலமாக திருக்கேதீச்சரம் ஆலயத்தின் வரலாற்று தகவல்கள் அடங்கிய ஆவணப் பெட்டகமாக குறித்த நூல் கலாநிதி ஆறு. திருமுருகனால் தொகுக்கப்பட்டு இன்றைய தினம் அகில இலங்கை இந்து மாமன்ற அலுவலகத்தில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
திருக்கேதீச்சரத்தின் தொன்மையினையும் வரலாற்றையும் சைவத்தின் பெருமைகளையும் ஒருங்கோ வெளிக் கொண்டுவரும் வகையில் குறைத்த ஆவணத்தினை தொகுத்து நூலாக வெளியிட்ட கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களின் நூலினை பேராசிரியர் சண்முகதாஸ் வெளியிட்டு வைக்க யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் பெற்றுக்கொண்டார்.
You must be logged in to post a comment Login