அரசியல்
கோட்டாவின் வருகை ஒத்திவைப்பு!
இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச, எதிர்வரும் 25 ஆம் திகதி நாடு திரும்புவார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவரின் வருகை செப்டம்பர் மாதம்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், கோட்டாபய ராஜபக்சவுககும் இடையில் நேற்று (19) இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பின்னரே, கோட்டாவின் வருகை பிற்போடப்பட்டுள்ளது.
அதேவேளை, கோட்டாபய ராஜபக்சவின் வீடு அமைந்துள்ள மிரிஹான பகுதியிலும் அதனைச் சூழவுள்ள பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு பொலிஸார் மற்றும் புலனாய்வு அதிகாரிகளுக்கு நேற்று (19) பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகள் விசேட கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login