இலங்கை
ஜெனரேட்டரில் கோளாறு! – மின்வெட்டு 3 மணித்தியாலமாக அதிகரிப்பு
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாம் அலகில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் திருத்தப்படும் வரை யுகதனவி மற்றும் ஏனைய எரிபொருள் உற்பத்தி நிலையங்கள் மூலம் மின்சார விநியோகத்தை நிர்வகிப்பதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தெரிவித்துள்ளார்.
இரண்டாம் அலகில் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மூன்றாம் கட்டப் பணிகள் தொடரும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முதலாம் அலகில் திருத்தவேலைகள் முடியுவரை நாளாந்த மின்வெட்டு மூன்று மணித்தியாலங்களாக அதிகரிக்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்றைய மின்வெட்டு 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு இருக்கும். நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் முதலாம் அலகின் பழுது காரணமாக அதனை திருத்தம் செய்வதற்கு 14 -16 நாட்கள் தேவைப்படுவதால் நாளை முதல் மின் வெட்டு நீடிக்கப்படும். இதற்கான அனுமதி கிடைத்தவுடன் மின்வெட்டு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login