அரசியல்
கட்சி தாவுகிறார் பொன்சேகா?
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னிலை சோஷலிசக் கட்சியில் இணையக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து பொன்சேகாவுக்கு அக்கட்சியில் உயர் பதவியொன்று வழங்கப்படவுள்ளது எனவும், அடுத்த பொதுத்தேர்தலில் அக்கட்சியின் சார்பிலேயே அவர் போட்டியிடுவார் எனவும் தெரியவருகின்றது.
எனினும், இது தொடர்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது, முன்னிலை சோஷலிசக் கட்சியின் ஒரு அங்கமாக செயற்படுகின்றது. அந்த ஒன்றியத்தின் முழு ஆதரவு பொன்சேகாவுக்கு இருக்கின்றது. அந்த அடிப்படையிலேயே காலி முகத்திடல் போராட்டத்தில் பொன்சேகாவுக்கு உரிய இடம் வழங்கப்பட்டது.
You must be logged in to post a comment Login