இலங்கை
சீனக் கப்பல் விவகாரம்! – வெளிவிவகார அமைச்சு அறிக்கை
சீன உளவு கப்பலான ‘யுவாங் வாங் 5’ இன், வருகையை ஒத்திவைக்குமாறு, சீன தூதரகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டமையை இலங்கை அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கையில்,
சீனக் கப்பல், 2022 ஓகஸ்ட் 11 முதல் 17 வரை அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதற்கு, இலங்கையின் இராஜதந்திர அனுமதி, 2022 ஜூலை 12 அன்று கொழும்பில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்திற்கு அமைச்சகத்தால் வழங்கப்பட்டது.
இதனையடுத்து மேலதிக ஆலோசனைகள் காரணமாக, அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் இந்த கப்பலின் வருகையை ஒத்திவைக்க, கொழும்பில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்திடம் வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login