இலங்கை
டொலரில் பணம் செலுத்துவோருக்கு வரிசையற்ற எரிபொருள்
அமெரிக்க டொலரில் (USD) பணம் செலுத்துவோருக்கு வரிசையற்ற எரிபொருள் அனுமதி அட்டை வழங்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பரிந்துரைத்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகள், புலம்பெயர் பணியாளர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் விமான நிலையத்தில் அமெரிக்க டொலர்களில் (USD) பணம் செலுத்தத் தயாராக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு பிரத்தியேக எரிபொருள் அனுமதிச் சீட்டு வழங்குவதற்கான யோசனையையே அவர் முன்வைத்துள்ளார்.
இவ்வாறு பணம் செலுத்துவோருக்கு எரிபொருள் வரிசைகள் இருக்காது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login