இலங்கை
மீண்டும் இராணுவ பாதுகாப்பு!
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மீண்டும் இராணுவ பாதுகாப்பு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பெட்ரோலிய பாவனையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாதுன்ன தெரிவிகையில்,
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து அகற்றப்பட்ட இராணுவப் பாதுகாப்பை மீள வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளோம்.
ஏற்கனவே வழங்கப்பட்ட இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவதன் மூலம் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். – என்றார்.
இதேவேளை, கடந்த சில நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பத்தில் ஈடுபட்டிருந்த 13 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login