அரசியல்
நாடாளுமன்ற குழுக்களின் தலைமைப்பதவி எதிரணிக்கு!
9 ஆவது நாடாளுமன்றத்தின் 3ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 03 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் ஆரம்பித்துவைக்கப்படும்.
2 ஆவது கூட்டத்தொடர் நேற்று நள்ளிரவுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு,நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு, சபைக் குழு உட்ட முக்கியமான 11 குழுக்கள் செயலிழந்துவிட்டன.
மேற்படி 11 குழுக்களில் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு ( கோபா), அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), அரசாங்க நிதி பற்றிய குழு என்பன முக்கியத்துவம்மிக்கவை.
ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்கள் இக்குழுக்களில் அங்கம் வகித்தாலும்,
தலைமைப்பதவியை தக்க வைத்துக்கொள்ள ஆளுங்கட்சியே முற்படும். நல்லாட்சியின்போது இந்நிலைமை மாறுபட்டது.
கோப் குழு தலைவராக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தியும், அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரனும் செயற்பட்டனர்.
மொட்டு ஆட்சியின்கீழ் கோப் குழுவுக்கு சரித ஹேரத், கோபா குழுவுக்கு திஸ்ஸ விதாரண, அரச கணக்குகள் பற்றிய குழுவுக்கு அநுர பிரியதர்சன யாப்பா போன்ற மொட்டு கட்சி எம்.பிக்களே நியமிக்கப்பட்டனர்.
எனினும், புதிய கூட்டத்தொடர் ஆரம்பமானதும், மேற்படி முக்கிய மூன்று குழுக்களினதும் தலைமைப்பதவிகள் எதிரணி எம்.பிக்களுக்கு வழங்கப்படவுள்ளன.
You must be logged in to post a comment Login