அரசியல்
ஸ்டாலின் உள்ளிட்ட 6 பேர் வெளிநாடு செல்ல தடை!
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட ஆறு பேர் வெளிநாடு செல்ல கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஜோசப் ஸ்டாலினுடன், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ரங்கன லக்மால், லஹிரு வீரசேகர, எரங்க குணசேகர மற்றும் ஜீவந்த பீரிஸ் ஆகியோருக்கும் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி பொலிஸ் தலைமையகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்தி, பொது சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், குறித்த 6 பேருக்கும் எதிராக இந்த தடையுத்தரவு கோட்டை பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய பிறப்பிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login