அரசியல்
இலங்கைக்கான பயணத்தை தவிர்க்குக! – வெளிநாடுகள் நாட்டு மக்களிடம் கோரிக்கை
இலங்கை மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், தற்போது அரசை பதவிவிலகக் கோரி நாட்டு மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவிவிலகுவதாக அறிவித்த நிலையில், நாட்டைவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
நாட்டில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில், இலங்கைக்கான அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இங்கிலாந்து, சிங்கப்பூர் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் தனது நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
You must be logged in to post a comment Login