அரசியல்
ரணில் உடனடியாக பதவி விலகவேண்டும்! – கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்து
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடனடியாக பதவி விலகவேண்டும் என கட்சித் தலைவர்கள், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று(புதன்கிழமை) நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடும் காரணமாக அமைந்துள்ளது எனவும் கட்சித் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றும் முன்னர், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment Login