அரசியல்
லலித் வர்ணகுமார துப்பாக்கிச்சூடு சம்பவம்! – விசாரணைகள் ஆரம்பம்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் லலித் வர்ணகுமார, வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
களுத்தறை, ஹொரணை – ஹங்குருவாதொட பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு வழிபாட்டு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதில் பங்கேற்றவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் துப்பாக்கியைகாட்டி மிரட்டியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். அதன்பின்னர் வானத்தை நோக்கி சூடு நடத்திவிட்டு அவர் தப்பிச்சென்றுள்ளார்.
You must be logged in to post a comment Login