அரசியல்
எதிர்க்கட்சித் தலைவர் – IMF பிரதிநிதிகள் சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் IMF பிரதிநிதிகளிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற குறித்த சந்திப்பின்போது, தற்போது நாட்டில் நிலவும் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ IMF பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், நாட்டை மீட்டெடுப்பதற்கு எதிர்க்கட்சியாக எந்நேரத்திலும் ஆதரவு வழங்குவதாகவும், நாட்டில் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் நிலைநாட்டி மீண்டும் ஒரு வளமான நாடாக மாற்றுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
You must be logged in to post a comment Login