அரசியல்
பாடசாலைகளுக்கு ஒரு வாரம் விடுமுறை!
கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை திங்கள் முதல் ஒரு வாரம் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
எரிபொருள் நெருக்கடியால் போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள ஸ்தம்பிதம் உட்பட சில விடயங்களை கருத்திற்கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் ‘ஒன்லைன்’ மூலம் கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
நாட்டில் ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகளை திறப்பதா அல்லது ஒன்லைன் மூலம் கற்றலை மேற்கொள்வதா என்பது குறித்து தீர்மானிக்கும் அதிகாரம், அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, காலை 7 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்வெட்டை அமுல்படுத்தாதிருக்க பொது பயன்பாட்டு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
You must be logged in to post a comment Login