இலங்கை
லொறி மோதி வயோதிபர் பரிதாபச் சாவு!
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீதியைக் கடக்க முற்பட்ட வயோதிபரை லொறி மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் தொடர்பான விபரங்கள் இதுவரையில் தெரியவில்லை என்று உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment Login