இலங்கை
நாட்டை மீட்பதற்கான மாற்று திட்டத்தை முன்வைக்க தயார்! – சம்பிக்க தெரிவிப்பு
“தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுத்துவரும் பேச்சு தோல்வியை நோக்கி நகரும் பட்சத்தில் நாட்டை மீட்பதற்கான மாற்று திட்டத்தை முன்வைக்க தயார்.” – என்று 43 ஆம் படையணியின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“தற்போதை அரசு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்திவருகின்றது. ஜுலை முதல் வாரமளவில் ஆரம்பக்கட்ட இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கின்றோம். ஆனால் அதன்மூலம் எல்லா பிரச்சினைகளும் தீராது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படும் நகர்வுகள் தோல்வி அடைந்தால், மாற்று திட்டத்தை முன்வைக்க நாம் தயார்.
ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல கட்சிகளின் நல்லவர்கள் உள்ளனர். அவர்களும் இணைய வேண்டும். நபர்கள் முக்கியம் அல்ல. நாடுதான் முக்கியம். ” – என்றார்.
You must be logged in to post a comment Login