இலங்கை
கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி சிறுமி சாவு!


வீட்டில் இருந்த பிளக்கில் கைபிடியற்ற ஸ்குரு டிரைவரைச் செலுத்திய 4 வயதுச் சிறுமி மின்தாக்கியதில் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
கிளிநொச்சி மாவட்டம், முழங்காவில், வெள்ளாங்குளம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அன்ரன் ஜினேசன் ஜினேஜினி (வயது – 4) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிறுமியின் உடல் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகள் நடைபெற்றன.
இந்தச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
You must be logged in to post a comment Login