இலங்கை
சீரற்ற காலநிலை! – 41 வீடுகள் சேதம்
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் நூற்றுகணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடை மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஒருவர் பலியாகியுள்ளார். 41 வீடுகள் சேதமடைந்துள்ளன.
57 குடும்பங்களைச் சேர்ந்த 236 பேர் ஐந்து பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அடை மழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் 6 மாவட்டங்களில் 132 குடும்பங்களைச் சேர்ந்த 530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login