இலங்கை
குடாநாட்டில் நான்காவது தடுப்பூசி ஏற்றும் பணி
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4ஆவது கொரோனாத் தடுப்பூசி (பைசர்) ஏற்றும் பணி தற்போது இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில், யாழ்., நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட 3ஆவது கொரோனாத் தடுப்பூசி பெற்று 3 மாதங்கள் கடந்த அனைவரும் 4ஆவது தடுப்பூசியை (பைசர்) பிரதி சனிக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் முற்பகல் 11.30 மணிவரை கோண்டாவிலில் அமைந்துள்ள நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பெற்றுக்கொள்ளலாம் என்று நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login