இலங்கை
பாடசாலை வளாகத்துக்குள் கைக்குண்டு மீட்பு!
திருகோணமலை – குச்சவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது எனக் குச்சவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
குச்சவெளி அந்நூரிய்யா பாடசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள மைதானத்தில் நேற்று இந்தக் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
அந்நூரிய்யா பாடசாலை வளாகத்தின் மைதானத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது புதைக்கப்பட்ட நிலையில், காணப்பட்ட கைக்குண்டு தொடர்பில் பிரதேச மக்கள் குச்சவெளிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதை அடுத்து கைக்குண்டை மீட்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குச்சவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment Login