அரசியல்
மே 31இல் பதவி விலகுகிறார் இராணுவத் தளபதி சவேந்திர!
அரசியல் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள கடும் அழுத்தங்களையடுத்து இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா எதிர்வரும் 31ஆம் திகதி தமது பொறுப்பிலிருந்து விடுகை பெறவுள்ளார்.
அவர் புதிய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி பதவியேற்கவுள்ளார்.
அவர் இதுவரை காலமும் பதில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாகச் செயற்பட்டு வந்தார்.
இதேவேளை, இராணுவப் பதவி நிலை பிரதானி பதவியிலிருந்து விடுகை பெறும் மேஜர் ஜெனரல் விகும் லியனகே, புதிய இராணுவத் தளபதியாக எதிர்வரும் முதலாம் திகதி நியமிக்கப்படவுள்ளார்.
You must be logged in to post a comment Login