அரசியல்
அத்துகோரள கொலை: இதுவரை 14 பேர் கைது!
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலைச் சம்பவம் தொடர்பாக மேலும் 2 சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி நிட்டம்புவ நகரில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியிலிருந்து, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாவலர் ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 14 சந்தேகநபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
You must be logged in to post a comment Login