அரசியல்
விசேட ஜனாதிபதி ஆணைக்குழு: சுயாதீன எம்.பிக்கள் அழுத்தம்!
நாட்டில் இம்மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரியுள்ளது.
கடிதம் ஒன்றில் மூலம், அந்த ஒன்றியத்தின் உறுப்பினர்களால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண உள்ளிட்ட 8 பேர் கையொப்பமிட்டு, குறித்த கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login