இலங்கை
சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு!
சிற்றுண்டிகளின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக சிற்றுணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பானது அனைத்துப் பொருட்களுக்கும் தாக்கம் செலுத்துகின்றது. எனவே, நூற்றுக்கு 10 சதவீதத்தால் சிற்றுணவகங்களின் உணவு மற்றும் பானங்களின் விலைகளை அதிகரிக்குமாறு சிற்றுணவக உரிமையாளர்களிடம் கோருகின்றோம் என்று அந்தச் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இதனை விடவும் விலையை அதிகரிக்க வேண்டாம். ஏனெனில், வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
You must be logged in to post a comment Login