இலங்கை
இன்று இடம்பெறாது சமையல் எரிவாயு விநியோகம்!
நாட்டில் இன்று சமையல் எரிவாயு விநியோம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக காத்திருப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவு நேற்று செலுத்தப்பட்டது என லிட்ரோ நிறுவனத் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பல்கள் மூலம் 7 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் எரிவாயு நாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளது.
இதன் முதலாவது கப்பல் 3 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் எரிவாயுடன் எதிர்வரும் வியாழக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளது எனவும் லிட்ரோ நிறுவனத் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
You must be logged in to post a comment Login