அரசியல்
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மீது தாக்குதல்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசுவாசியென கருதப்படும், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு, பேர வாவிக்கு அருகில் வைத்தே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலில் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், அவரின் வாகனத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது .
நேற்றைய தாக்குதல் சம்பவத்தின்போது , இவர் ஆளுங்கட்சிக்கு விசுவாசமாக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டு நிலவுகின்றது.
You must be logged in to post a comment Login