அரசியல்
அவசரகால சட்டத்தை உடன் வாபஸ் பெறுக! – கோட்டாவிடம் சுரேஷ் வலியுறுத்து
“அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி, அரசு மீண்டும் தவறிழைத்துள்ளது.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அவசரகால நிலையால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவார்களானால் அதற்கான விளைவுகளை அரசு சந்திக்க வேண்டியேற்படும்.
எனவே, தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகால நிலையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக வாபஸ் பெற வேண்டும்” – என்றார்.
You must be logged in to post a comment Login