இலங்கை
எம்.பியின் வாகனத்தில் மோதுண்டு ஒருவர் பலி!
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் காரில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியில் நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமும் அந்தக் காரில் பயணித்துள்ளார் என்று பொலிஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காரைச் செலுத்திய சாரதி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment Login