அரசியல்
போராட்டக்காரர்களை விரட்டியடிக்கத் திட்டம்! – பொன்சேகா குற்றச்சாட்டு
அலரி மாளிகைக்கு முன்பாக அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைத் தாக்குவதற்கும் அவர்களை அங்கிருந்து விரட்டியடிப்பதற்கும் பாதுகாப்புத் தரப்பினர் திட்டமிட்டுள்ளனர் என்று நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. தெரிவித்துள்ளார்.
அடக்குமுறை மற்றும் பொலிஸாரின் அதிகாரம் மூலம் மக்களின் இறையாண்மை ஒடுக்கப்படுவதை மக்கள் எதிர்க்க வேண்டும் என்றும் அவர் ‘பேஸ்புக்’ ஊடாக வலியுறுத்தியுள்ளார்.
”போராட்டக்காரர்களே ஒன்றிணையுங்கள், போராடுங்கள்” எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் ஊடகங்கள் வினவியபோது,
“எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது அவ்வாறான நடவடிக்கை எடுக்கும் எதிர்பார்ப்பில்லை” என்று பதிலளித்துள்ளார்.
You must be logged in to post a comment Login