அரசியல்
தேர்தல் வெற்றிக்காக ஈஸ்டர் தாக்குதல் தகவல் மூடிமறைப்பு! – பேராயர் குற்றச்சாட்டு
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான தகவல்களை அறிந்திருந்தும் தேர்தல் வெற்றிக்காக அவை மறைக்கப்பட்டன என்று கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
இத்தாலியில் நேற்று நடைபெற்ற விசேட ஆராதனையொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிபோதே கர்தினால் ஆண்டகை இதனைக் கூறினார்.
இந்த விசேட ஆராதனையில் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் ஆயர்கள், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
You must be logged in to post a comment Login