அரசியல்
மஹிந்த பதவி விலக வேண்டும்! – கோட்டாவிடம் ‘மொட்டு’ எம்.பிக்கள் வலியுறுத்து
பிரதமர் மஹிந்த உள்ளிட்ட அரசு பதவி விலக வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய வகையில் இடைக்கால அரசு ஒன்றை அமைப்பதற்கு வழிவகுத்து, பிரதமர் மற்றும் அரசு பதவி விலக வேண்டும் என்று இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
இதேவேளை, அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற அமைச்சர்ள், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் ஒன்றியத்துக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
அதன்போது, பிரதமர் மஹிந்த ராஜபக்சவோ அல்லது அரசோ பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்களின் ஒன்றியம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து தான் பதவி விலகப் போவதில்லை என்றும் பிரதமர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login