அரசியல்
துப்பாக்கிச்சூடு நடத்த ஆலோசனை வழங்கவில்லை! – பொலிஸ்மா அதிபர் சாட்சியம்
பொதுமக்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்குத் தாம் ஆலோசனை வழங்கவில்லை என்று பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளார் என ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் கருணாசிறி தெரிவித்தார்.
ரம்புக்கனையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்காகப் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் நேற்று மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதனிடையே, ரம்புக்கனையில் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சி.டபிள்யூ.சி. தர்மரத்ன மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்னவால் ஆலோசனை வழங்கப்பட்டது எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login