இலங்கை
இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயற்சித்த 2 சகோதரர்கள் கைது!
சட்டவிரோதமாக கடல் மார்க்கத்தினூடாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயற்சித்த இரு இளைஞர்கள் நெடுந்தீவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் இரு இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் கூறினர்.
மன்னார் – பேசாலையை சேர்ந்த 30 மற்றும் 32 வயதான சகோதரர்களே நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மீன்பிடிப் படகொன்றில் சென்றபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் தெரிவித்த்தனர்.
நெடுந்தீவு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment Login