இலங்கை
திருநெல்வேலியில் விரிவுரையாளரின் வீட்டில் ஒரு கோடி ரூபா பெறுமதியான நகைகள் திருட்டு
யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் உள்ள விரிவுரையாளர் ஒருவரின் வீடுடைத்து சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன என கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றிலேயே இந்த திருட்டுச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
விரிவுரையாளரது குடும்பம் நேற்று மாலை 5.30 மணியளவில் உறவினர் வீட்டுக்குச் சென்று இரவு 8.30 மணிக்கு வீடு திரும்பிய இடை நேரத்தில் திருட்டு இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 50 பவுண் தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளன என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது என்று பொலிஸார் கூறினர்.
உயர் கல்வி நிறுவனம் ஒன்றின் விரிவுரையாளரது வீட்டிலேயே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
You must be logged in to post a comment Login